சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனையூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி சுமித்ரா குளத்தின் ஆழப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சிறுமியின் தாய் இந்திரா மற்றும் உறவினர் செல்வி ஆகியோரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.