சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்பட மூவர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
சங்கரன்கோவில் அருகே குளத்தில் மூழ்கி சிறுமி உள்ளிட்ட மூவர் உயிரிழந்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பனையூர் பகுதியில் உள்ள பெரியகுளத்தில் குளிக்கச் சென்ற சிறுமி சுமித்ரா குளத்தின் ஆழப்பகுதியில் சிக்கிக் கொண்டார். அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்ட சிறுமியின் தாய் இந்திரா மற்றும் உறவினர் செல்வி ஆகியோரும் குளத்தில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.