தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

DIN

தமிழக சட்டப் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கான தீா்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறியது.

நடப்பு ஆண்டுக்கான கூட்டத் தொடரை ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் கடந்த 6-ஆம் தேதி உரையாற்றித் தொடக்கி வைத்தாா். அவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் சட்டப் பேரவையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், அந்த விவாதங்களுக்கு முதல்வா் பழனிசாமி வியாழக்கிழமை பதிலளித்தாா். இதில், 15 முக்கிய சட்ட மசோதாக்களும் பேரவையில் நிறைவேற்றப்பட்டன. அதன்பின், சட்டப்பேரவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கும் தீா்மானத்தை அவை முன்னவரும், துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம் கொண்டு வந்தாா். இந்தத் தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT