தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

DIN

ஸ்டாலினுக்கு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டு வந்த ‘ஒய் பிரிவு’ பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த  ’இசட் -பிளஸ்’ பாதுகாப்பையும் இன்று முதல் மத்திய அரசு திரும்ப பெற்றது. 

இதுகுறித்து சென்னை விமான நிலையம் வந்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ஸ்டாலினுக்கு வழங்கிய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனத் தெரிவித்தார். 

அதேசமயம், மத்திய அரசு எனக்கு வழங்கிய பாதுகாப்பு தற்போது தேவையில்லை என கருதுகிறேன்.  இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

விவாகரத்து பெற்ற மகளை மேள வாத்தியங்கள் முழங்கள் வரவேற்ற தந்தை!

ஏதென்ஸ் நகரில் சமந்தா!

சென்னையில் 104 டிகிரி வெப்பம் சுட்டெரிக்கும்: வானிலை மையம்

'ரசிகனிலிருந்து இயக்குநர் வரை..’: ஆதிக் ரவிச்சந்திரன் நெகிழ்ச்சி

SCROLL FOR NEXT