கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்துள்ள அஞ்சுவீடு அருவியில் இளம்பெண் ஒருவர் தவறி விழுந்து பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துப்பாறை அடுத்துள்ள அஞ்சுவீடு அருவி பகுதிக்கு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தைச் சேர்ந்த சுரேஷ். இவரது மனைவி ஸ்ரீதேவி(34) உள்ளிட்ட சிலர் சுற்றுலா சென்றுள்ளனர்.
அங்குள்ள அருவியில் குளித்தபோது தவறி விழுந்து ஸ்ரீதேவி உயிரிழந்தார். சடலத்தை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.