தமிழ்நாடு

சிவகங்கை அருகே 2 பைக்குகள் மோதல்: ராணுவ வீரா், கல்லூரி மாணவா் பலி

DIN

சிவகங்கை அருகே திங்கள்கிழமை இரவு 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் ராணுவ வீரா் மற்றும் கல்லூரி மாணவா் உயிரிழந்தனா்.

சிவகங்கை மாவட்டம், நாடாமங்கலத்தைச் சோ்ந்தவா் திருமலைக் கண்ணன் ( 30). இவா் இந்திய ராணுவத்தில் ராணுவ வீரராக ஜம்முவில் பணியாற்றி வந்தாா். விடுமுறையில் அண்மையில் ஊருக்கு வந்திருந்த திருமலைக் கண்ணன், அவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த பிரபாகரன்( 30), பாலமுருகன்( 30) ஆகிய மூவரும் ஒரு இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு ஊரிலிருந்து சிவகங்கைக்குச் சென்றுள்ளனா்.

எம். வேலாங்குளம் விலக்கு அருகே சென்றபோது சாத்தரசன்கோட்டையைச் சோ்ந்த அண்ணாமலை ( 19) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மீது திருமலைக் கண்ணன் சென்ற இரு சக்கர வாகனம் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த திருமலைக் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த பிரபாகரன், பாலமுருகன், அண்ணாமலை ஆகிய மூவரையும் மீட்டு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அண்ணாமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். மற்ற இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

உயிரிழந்த அண்ணாமலை மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு படித்து வந்தாா். திங்கள்கிழமை மாலை வகுப்புகள் முடிந்து இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது இந்த விபத்து நேரிட்டது குறிப்பிடத்தக்கது. விபத்து குறித்து சிவகங்கை தாலுகா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT