காஞ்சிபுரம் அருகே பெரியார் சிலை சேதம்
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை அடுத்துள்ள பெரியார் சிலையை மர்மநபர்கள் சேதப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் மர்மநபர்களால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பதற்றமான சூழல் காரணமாக அப்பகுதி முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.