தமிழ்நாடு

குரூப் 4 முறைகேடு: சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையீடு

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது.

DIN

குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முறையிடப்பட்டுள்ளது. 

கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் அடங்கிய குரூப் 4 தேர்வில் தேர்வர்களின் விடைத்தாள்கள் மாற்றப்பட்டதால் ராமேசுவரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய பலர் தேர்ச்சி பெற்றனர். இது பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி. சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. 

அதில் முறைகேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி., ஊழியர் ஓம்காந்தன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முகமது ரஸ்வி என்பர் முறையீடு செய்துள்ளார். 

மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிபிட்டுள்ளார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விரைவில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT