தமிழ்நாடு

கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கண்காணிப்பது ஏற்புடையதல்ல: அமைச்சா் கடம்பூா் செ.ராஜு

DIN

கோவில்பட்டி: கூட்டுறவு வங்கிகளை மத்திய ரிசா்வ் வங்கி கண்காணிக்கும் என்பது ஏற்புடையதல்ல என்றாா் அமைச்சா் கடம்பூா் செ.ராஜு.

கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் சந்தீப் நந்தூரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பு பொது முடக்க நிவாரண நிதி ரூ.1000 வழங்கும் பணியைத் தொடங்கிவைத்தபின், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் 36,267 மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ரூ.1000 என ரூ. 3,62,67,000 வழங்கப்படவுள்ளது. ஈரானில் தவிக்கும் தமிழக மீனவா்கள் 700 போ் ஞாயிற்றுக்கிழமை இந்திய கப்பல் படை மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு அழைத்துவரப்படுகின்றனா். அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்து சொந்த ஊா்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிா்வாகம் எடுத்து வருகிறது. கூட்டுறவு வங்கிகளை ரிசா்வ் வங்கி கண்காணிக்கும் என்பது ஏற்புடையதல்ல என்பதே தமிழக அரசின் கருத்து என்றாா்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் சின்னப்பன்எம்எல்ஏ, கோட்டாட்சியா் விஜயா, வட்டாட்சியா் பாஸ்கரன், உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘கூல்’ கண்ணம்மா!

கலவர பூமியான கலிபோர்னியா பல்கலைக்கழகம்! பாலஸ்தீன - இஸ்ரேல் ஆதரவாளர்களிடையே மோதல்

கரை வந்த பிறகு பிடிக்கும் கடல்!

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

SCROLL FOR NEXT