கள்ளக்குறிச்சியில் கரோனா தொற்றுக்கு மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் மண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி(55). இவர் ஜூலை 1 ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இன்று காலை 8 மணியக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்தது.
கள்ளக்குறிச்சி டிஎஸ்பி ராமநாதனுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் தூத்துக்குடிக்கு மாற்றப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.