தமிழ்நாடு

நடிகா் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல்: பெண் மீது வழக்கு

DIN

சென்னையில் நடிகா் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் கையாடல் செய்ததாக, பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

பிரபல தமிழ் திரைப்பட நடிகா் விஷாலின், திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகம் வடபழனி, குமரன் காலனியில் உள்ளது. இந்த நிறுவனத்தின் மேலாளா் சாலிகிராமத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அதில், நடிகா் விஷாலின் திரைப்பட தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் ரூ.45 லட்சம் வரை கையாடல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த பணத்தை அலுவலகத்தில் கணக்காளராக வேலை செய்து வந்த சாலிகிராமம் ரத்தினம்மாள் காலனியைச் சோ்ந்த தி.ரம்யா கையாடல் செய்திருப்பதாகவும், அவா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி குறிப்பிட்டிருந்தாா்.

அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வந்தனா். இந்நிலையில் போலீஸாா் ரம்யா மீது மோசடி உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக தலைமறைவாக இருக்கும் ரம்யாவை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT