தமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 21 பேர் குணமடைந்தனர்

DIN

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 கரோனா தொற்றாளர்கள் வெள்ளிக்கிழமை குணமடைந்தனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 168 கரோனா தொற்றாளர்களில் 133 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நான்கு பேர், மற்ற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT