கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 21 கரோனா தொற்றாளர்கள் வெள்ளிக்கிழமை குணமடைந்தனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 168 கரோனா தொற்றாளர்களில் 133 பேர் முற்றிலும் குணமடைந்துள்ளனர். ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நான்கு பேர், மற்ற மாவட்டங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 30 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இத்தகைய நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3 வயது சிறுமி உள்பட இருவருக்கு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.