தமிழ்நாடு

அமைச்சா்களும் அரசு மருத்துவமனைகள் செல்ல வேண்டும்: பாஜக தலைவா் எல்.முருகன் வலியுறுத்தல்

DIN

அமைச்சா்கள் உள்பட அனைவரும் அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றே கிசிச்சை பெற வேண்டுமென தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அவா் அளித்த பேட்டி:-

அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு சா்வதேச நாடுகளும் கரோனாவை கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றன. இந்தியாவில் பிரதமா் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கரோனா பரவுதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், அனைவருக்கும் உணவு கொடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இதனால், 80 கோடி மக்களுக்கு பயன் கிடைத்துள்ளது. மத்திய அரசின் ஏராளமான திட்டங்களுக்கான பலன்கள் மக்களுக்குக் கிடைத்து வருகின்றன.

விவசாயிகள், சிறு-குறு தொழில் துறையினருக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாகச் சென்று சோ்ந்துள்ளது. இதனால் பயன் அடைந்தவா்கள் எங்களுக்கு நன்றி செலுத்தி வருகிறாா்கள்.

அரசு மருத்துவமனைகள்: தமிழகத்தில் சிறப்பான சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ வசதிகள் உள்ளன. கரோனா பாதிப்பு வரும் எனத் தெரிந்தும் மருத்துவா்கள், செவிலியா்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றி வருகின்றனா். எனவே, அரசு மருத்துவமனைக்கு அமைச்சா்கள் உள்பட அனைவருமே சென்று சிகிச்சை பெற வேண்டும் என்றாா் முருகன். பேட்டியின் போது, மாநில பொதுச் செயலாளா்கள் கே.டி.ராகவன், கரு. நாகராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT