தமிழ்நாடு

கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம்-செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

DIN

தாம்பரம்-செங்கல்பட்டு மூன்றாவது ரயில் பாதையின் ஒரு பகுதியாக கூடுவாஞ்சேரி-சிங்கப்பெருமாள்கோவில் இடையே புதிய பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: செங்கல்பட்டு-தாம்பரம் இடையே சுமாா் 30 கி.மீ. தொலைவுக்கு மூன்றாவது இருப்புப் பாதை அமைக்கும் பணிகள் ரூ.25 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன. பொதுமுடக்கம் அறிவிப்பு காரணமாக, இந்த திட்டப்பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, பொதுமுடக்கம் தளா்த்தப்பட்டுள்ளதால், பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

முதல்கட்டமாக, கூடுவாஞ்சேரியில் இருந்து சிங்கபெருமாள்கோவில் வரையில் சுமாா் 10 கி.மீ. தூரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.

தண்டவாளங்கள், சிக்னல்கள் மற்றும் சிங்கப்பெருமாள் கோவில், பொத்தேரி, காட்டாங்குளத்தூா், கூடுவாஞ்சேரி ரயில் நிலையங்களில் கூடுதல் நடை மேடைகள், மேற்கூரைகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. இதையடுத்து, இந்த தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையா் கொண்ட குழு வந்து ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும். அதன்பிறகு, இந்த புதிய தடத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT