தமிழ்நாடு

அவிநாசியில் இலங்கைத் தமிழர் முகாமில் கரோனா தடுப்பு முகாம்

அவிநாசியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

DIN

அவிநாசியில் உள்ள இலங்கைத் தமிழர் முகாமில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி பேரூராட்சிக்கு உள்பட்ட வாரச்சந்தை வளாகத்தில் இலங்கை தமிழர்கள் முகாமில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பில் 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இம்முகாமில் உள்ள 120 குழந்தைகள் உள்பட அனைத்து பெரியவர்களுக்கும் கரோனா தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் உள்ளிட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதையடுத்து அனைவருக்கும் கபசுர குடிநீர், சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு, முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பேரூராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. 

இதில் வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மருத்துவர்கள் மோகன்ராஜ், ஜெயந்தி, யாகசுந்தரம், மருத்துவ சுகாதார ஆய்வாளர் ரமேஷ், வட்டாட்சியர் சாந்தி, பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி, செவிலியர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT