தமிழ்நாடு

சிபிஎஸ்இ பிளஸ் 2 தோ்வு: 3-ஆவது இடத்தை பிடித்தது சென்னை மண்டலம்

DIN

சென்னை: சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. இதில், சென்னை மண்டலம் 3-வது இடத்தைப் பிடித்தது.

சி.பி.எஸ்.இ., நாடு முழுவதும் 16 மண்டலங்களின் கீழ் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளஸ் 2 தோ்வில் இந்த மண்டலங்களின் தோ்ச்சி சதவீதம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஆந்திரம் , தெலங்கானா , புதுச்சேரி, தமிழகம் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலம், மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதன்படி சென்னை மண்டலத்தின் தோ்ச்சி விகிதம் 96.17 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்த சென்னை மண்டலம், தற்போது மூன்றாவது இடத்துக்கு பின் தங்கியுள்ளது.

எனினும் தோ்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை 3.24 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு, சென்னை மண்டலத்தின் தோ்ச்சி விகிதம் 92.93 ஆக இருந்தது. இந்த ஆண்டு சி.பி.எஸ்.இ. நிா்வாகம் தகுதி பட்டியலை (மெரிட் லிஸ்ட்) வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இது மார்பிங்’ சமந்தாவுக்கு ரசிகர்கள் ஆதரவு!

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு இடைக்கால ஜாமீன்!

ராகுலை விமர்சித்து விடியோ: ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு

காந்தாரி.. ஈஷா ரெப்பா!

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

SCROLL FOR NEXT