தமிழ்நாடு

தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி சோதனை தொடக்கம்

DIN


சென்னை: தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது.

கரோனா வைரஸை தடுக்க கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் கோவாக்சின் தடுப்பு மருந்தை மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க தமிழகத்தில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதன்படி, தமிழகத்தில் இன்று கோவாக்சின் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கும் சோதனை தொடங்கியது. செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோவாக்சின் மருந்து தன்னார்வலர்கள் இருவருக்கு செலுத்தி சோதிக்கப்பட்டது.

இதற்காக தேர்வு செய்யப்பட்ட 10 பேரில் இரண்டு பேருக்கு 0.5 என்ற அளவில் இந்த மருந்து தடுப்பூசி மூலம் செலுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து எஸ்ஆர்எம் பல்கலைக்கழக துணைவேந்தர் ரவிக்குமார் கூறுகையில், கோவாக்சின் மருந்து பரிசோதனையானது 6 மாதங்கள் வரை நடக்கும். அதே சமயம், கோவாக்சின் மருந்தின் செயல்பாடு வரும் 3 மாதங்களில் சரியாக தெரியவரும். பரிசோதனையில் நல்ல முடிவு கிடைக்கும்பட்சத்தில், மருந்தை விரைவல் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா தடுப்பூசியான கோவாக்சின் செலுத்தப்பட்ட 2 தன்னார்வலர்களும் நல்ல நிலையில் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி மக்களவைத் தொகுதிகளுக்கு காங்கிரஸ் -ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பு குழு அமைப்பு

மேற்கு தில்லி பாஜக வேட்பாளா் கமல்ஜீத் செராவத் வேட்புமனு தாக்கல் : ராஜஸ்தான் முதல்வா் பங்கேற்பு

தில்லி மகளிா் ஆணையத்தில் சட்டவிரோத நியமனம் 52 ஒப்பந்த ஊழியா்கள் நீக்கம்: துணை நிலை ஆளுநா் நடவடிக்கை

கேஜரிவால் கைதுக்கு எதிராக கையெப்ப இயக்கம் ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது

வடமேற்கு தில்லியில் தொழிற்சாலைகள் மேம்படுத்தப்படும் பாஜக வேட்பாளா் யோகேந்திர சந்தோலியா வாக்குறுதி

SCROLL FOR NEXT