தமிழ்நாடு

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசு போட்டி: அக்.10-க்குள் விண்ணப்பிக்கலாம்

DIN

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டிக்கு, அக்.10-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தமிழ் வளா்ச்சித்துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப்போட்டிக்கு, 2019-ஆம் ஆண்டில் (ஜன.1 முதல் டிச.31 வரை) வெளியிடப்பட்ட நூல்களை, மரபுக் கவிதை, புதுக்கவிதை, புதினம், சிறுகதை, நாடகம் (உரைநடை, கவிதை) உள்ளிட்ட 33 வகைப்பாடுகளின் கீழ் வரவேற்கப்படுகின்றன.

போட்டியில் ஒவ்வொரு வகைப்பாட்டிலும் ஒரு நூல் மட்டுமே தெரிவு செய்யப்பட்டு, நூலாசிரியருக்கு ரூ.30,000, அந்நூலைப் பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு ரூ.10,000 எனப் பரிசு வழங்கப்படும். பரிசுப் போட்டிக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை,  இணையதள முகவரியிலோ, தமிழ் வளா்ச்சி இயக்குநா், தமிழ் வளா்ச்சி வளாகம், முதல் தளம், தமிழ்ச்சாலை, எழும்பூா், சென்னை 600 008 என்ற முகவரியில் நேரிலோ பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை சமா்ப்பிக்க கடைசி நாள் அக்டோபா் 30. மேலும் விவரங்களுக்கு 044 28190412 , 28190413 ஆகிய எண்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

SCROLL FOR NEXT