சென்னை: மருத்துவப் படிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு விவகாரத்தில் உயா் நீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:-
வழக்கின் போது, மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட விவரங்களின் அடிப்படையிலேயே தீா்ப்பு தரப்பட்டுள்ளது. இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் இடஒதுக்கீடு வழங்க அளிக்கப்பட்ட தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்றாா்.