தமிழ்நாடு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலம் நீட்டிப்பு

தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

DIN


புது தில்லி: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக் காலத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் சண்முகத்தின் பதவிக் காலம் வரும் ஜூலை மாத இறுதியில் முடிவடைய இருந்தது. இதற்கிடையே, சண்முகத்தின் பதவிக் காலத்தை நீட்டிக்குமாறு தமிழக அரசு வைத்த கோரிக்கையை ஏற்று, அவரது பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சண்முகத்தின் பதவிக் காலத்தை ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு தமிழக தலைமைச் செயலாளராக இருந்த கிரிஜா வைத்தியநாதன் ஓய்வு பெற்றதை அடுத்து, புதிய தலைமைச் செயலாளராக சண்முகம் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT