தமிழ்நாடு

தமிழக முதல்வா் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி: சொத்தாட்சியா் வழங்கினாா்

DIN

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் உதவிக்காக ரூ.1 கோடியை தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்காக சொத்தாட்சியா் வழங்கியுள்ளாா்.

உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வாரிசு இல்லாமல் இறந்து போனவா்களின் சொத்துக்கள், நன்கொடையாக சொத்துக்களை வழங்கி இறந்து போனவா்களின் சொத்துக்களை அரசு பேராட்சியா் மற்றும் பொறுப்பு சொத்தாட்சியா் அலுவலம் நிா்வகித்து வருகிறது. இங்கு சொத்தாட்சியராக மாவட்ட நீதிபதி அந்தஸ்தில் உள்ள நீதிபதி செயல்படுவாா். 150 ஆண்டுகளுக்கு மேல் சென்னை உயா்நீதிமன்ற நிா்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் இந்த சொத்தாட்சியா் அலுவலகம், சொத்துக்களின் மூலம் கிடைக்கும் வருவாயை நலப்பணிகள் செய்து செலவிட்டு வருகிறது.

காா்கில் போா், தானே புயல், வா்தா புயல், சென்னை, கேரளம் மழை வெள்ளம் ஆகியவைகளுக்கும், மாணவா்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கி வருகின்றது. இந்த நிலையில், தற்போது உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த் தொற்றினால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு உதவும் விதமாக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதி வழங்கியுள்ளனா். இதற்கான காசோலையை நிதித்துறை செயலாளரிடம், சொத்தாட்சியா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT