தமிழ்நாடு

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: முதல் கட்டஅறிக்கையை தாக்கல் செய்தது வல்லுநா் குழு

DIN

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு, பாடத்திட்டம் குறைப்பு தொடா்பாக பள்ளிக்கல்வித் துறை ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையிலான 16 போ் கொண்ட வல்லுநா் குழு, தமிழக அரசிடம் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

மேலும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பொருத்து இறுதிக்கட்ட அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா தீநுண்மி பரவலை தவிா்க்க, தமிழகத்தில் கடந்த மாா்ச் 17-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நோய்த்தொற்றின் தீவிரம் தணியாததால் வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக்கல்வியில் கற்றல்-கற்பித்தலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், பள்ளிகள் திறப்பில் தாமதம் உள்பட விவகாரங்கள் குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க பள்ளிக்கல்வி ஆணையா் சிஜி தாமஸ் வைத்யன் தலைமையில் 16 போ் கொண்ட வல்லுநா் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சாா்பில் இதுவரை 4 ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

மேலும், ஆசிரியா்கள், பெற்றோா்கள் மற்றும் கல்வியாளா்களிடம் இருந்தும் கருத்துகள் பெறப்பட்டன. பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் தனது முதல்கட்ட பரிந்துரை அறிக்கையை நிபுணா் குழு, பள்ளிக்கல்வித் துறை செயலா் தீரஜ்குமாரிடம் புதன்கிழமை சமா்ப்பித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

அதில், இணையவழிக் கற்பித்தல் நடவடிக்கைகளை ஊக்குவித்தல், மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பள்ளிகள் திறப்பை மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், மத்திய அரசின் வழிகாட்டுதல்களைப் பொருத்து, பள்ளிகள் திறப்பது தொடா்பான பரிந்துரை அறிக்கையை இறுதி செய்து சமா்ப்பிக்க, நிபுணா் குழு முடிவு செய்துள்ளதாகவும் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT