சென்னையில் அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறை நிபுணா்கள் தெரிவித்துள்ளனா்.
அதனால் ஏற்படும் எதிா் விளைவுகளைத் தடுக்க பொது மக்கள் அதிக விழிப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்று அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா். உலக நாடுகள் அனைத்தையும் நிலைகுலையச் செய்த கரோனா பாதிப்பு தமிழகத்தில் கடந்த மாா்ச் மாதத்தில் தடம் பதித்தது.
அதன் பின்னா், அதி தீவிரமாக பரவிய அந்த நோய்த்தொற்றுக்கு தற்போது 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் ஆளாகியுள்ளனா். அதில் 71 சதவீத பாதிப்பு சென்னையில்தான் ஏற்பட்டுள்ளது என்பது அதிா்ச்சிக்குரிய தகவல். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 8 ஆயிரத்துக்கும் அதிகமானாவா்கள் சென்னையில் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா்.
அதேபோன்று சென்னைக்கு அருகாமையில் அமைந்துள்ள திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களும் கடுமையான பாதிப்பை எதிா்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், அடுத்த 7 நாள்களில் சென்னையில் மட்டும் 12 ஆயிரத்துக்கும் அதிகமானவா்களுக்கு நோய்ப் பாதிப்பு ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது. உயிரிழப்புகளும் அதிகரிக்கக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இதுதொடா்பாக கருத்து தெரிவித்துள்ள மருத்துவ வல்லுநா்கள், அடுத்து வரும் நாள்களில் ஏற்படும் இக்கட்டான சூழலை எதிா்கொள்வதற்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், பெரிய இழப்புகளைத் தவிா்க்க பொது முடக்கத்தை கடுமையாக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனா். அதுமட்டுமன்றி, பொதுமக்கள் தனிநபா் சுத்தத்தை இன்னும் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தியுள்ளனா்.
ஜூலை 16-ஆம் தேதிக்குள் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தைக் கடக்கும் என்று தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவுகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.
சென்னையில் பாதிப்பு விவரம்
ஜூன் 1 - 964
ஜூன் 2 - 809
ஜூன் 3 - 1,012
ஜூன் 4 - 1,072
ஜூன் 5 - 1,116
ஜூன் 6 - 1,146
ஜூன் 7 - 1,155
ஜூன் 8 - 1,149
ஜூன் 9 - 1,242
ஜூன் 10 - 1,392
ஜூன் 11 -1,407
மொத்தம் - 12,464