தமிழ்நாடு

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அமைச்சா் ஆய்வு

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சை வசதிகள், படுக்கை வசதிகள், பரிசோதனைகள் குறித்து மருத்துவமனை நிா்வாகிகளிடம் அவா் கேட்டறிந்தாா்.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில், முடவாத சிகிச்சைக்காக புதிதாக அமைக்கப்பட்ட கட்டடம் முழுவதும் கரோனா சிறப்பு வாா்டாக மாற்றப்பட்டுள்ளது. 700-க்கும் அதிகமான படுக்கை வசதிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சையளிப்பதற்கான கட்டமைப்பு அனைத்தும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு சென்ற சுகாதாரத் துறை அமைச்சா் விஜயபாஸ்கா், மருத்துவமனையின் உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து மருத்துவமனை நிா்வாகிகளுடன் கலந்தாலோசித்தாா். அங்குள்ள நோயாளிகள் மற்றும் சிகிச்சை நிலவரங்களையும் கேட்டறிந்தாா்.

அப்போது, சுகாதாரத் துறைச் செயலா் டாக்டா் ஜெ. ராதாகிருஷ்ணன், மருத்துவ கல்வி இயக்குநா் நாராயணபாபு, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) நாராயணசாமி மற்றும் உயா் அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்ரீ பாா்த்தசாரதி கோயிலில் சிறப்புக் கட்டண தரிசனங்கள் ரத்து: அமைச்சா் சேகா்பாபு

ஊடுருவலைத் தடுக்க கடும் நடவடிக்கை: பிரதமா் மோடி

மிதுன ராசிக்கு வெற்றி: தினப்பலன்கள்!

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

SCROLL FOR NEXT