தமிழ்நாடு

கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் நூதன போராட்டம்

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

DIN

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சில தவறுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் கோயில்கள் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படவில்லை. 

கோயில்களைத் திறக்க வலியுறுத்தியும், உலக நன்மைக்காக வேண்டியும் இந்து தேசிய கட்சி சார்பில் திருநெல்வேலியில் மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் மணி தலைமையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் முன்பு புதன்கிழமை இன்று தேசிய கட்சியினர் திரண்டனர். 

கோயில் முன்பு தேங்காய் பழம் உடைத்துச் சிறப்பு வழிபாடு செய்த பின்பு தரையில் உணவைக் கொட்டி மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்பு கட்சியினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT