விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் அதிமுக எம்எல்ஏ கிருஷ்ணன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.
விழுப்புரம் அய்யனார்குளம் வீதி நாலாயிரம் தெருவில் வசித்து வந்தவர் பி. கிருஷ்ணன் (86). மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோது, 1977-இல் அவர்கள் சந்தித்த முதல் தேர்தலில் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராகத் தேர்வானவர் பி. கிருஷ்ணன்.
இவர் ஆரம்ப காலத்தில் சோடா கடை நடத்தியவர் என்பதால் சோடா காடை கிருஷ்ணன் என அழைக்கப்பட்டவர். இவருக்கு மனைவியும், இரண்டு மகன்கள் ஒரு மகளும் உள்ளனர்.
தற்போது எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பில் இருந்தார். வயது முதிர்வின் காரணமாக கட்சிப் பணியில் இருந்து அண்மையில் ஒதுங்கியிருந்தார்.
இந்த நிலையில் உடல்நலக்குறைவால் சனிக்கிழமை மாலை அவர் காலமானார். இவரது நல்லடக்கம் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.