தமிழ்நாடு

செஞ்சி காவலர் காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை

DIN

செஞ்சி காவலர் பாதுகாப்புப் பணியை முடித்துச் சென்ற நிலையில், காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நடு நெல்லிமலை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் ( 26 ), செஞ்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிகிறார். இவர் பொதுத்தேர்வுப் பாதுகாப்பு பணியில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தார். 

இந்த நிலையில், பணி முடித்துச் சென்று, செஞ்சியை அடுத்த அத்தியூர் காட்டுப்பகுதியில் திங்கள்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். காவலர் ஒருவர் காட்டுப்பகுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலிறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சரவணன் உடலைக் கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

SCROLL FOR NEXT