ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர்: அன்பழகன் மறைவுக்கு கமல் இரங்கல்
ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடுஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர்: அன்பழகன் மறைவுக்கு கமல் இரங்கல்
ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர் என்று திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவரும் முன்னாள் நிதியமைச்சரும் திமுக பொதுச் செயலாளருமான பேராசிரியா் க. அன்பழகன் (97) வெள்ளிக்கிழமை நள்ளிரவு காலமானாா்.
அவரது உடல் இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
அன்பழகன் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அதில், தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் திரு.அன்பழகன் அவர்களின் இழப்பு வேதனைக்குரியது.
அவர் குடும்பத்தாருக்கும் அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.