தமிழ்நாடு

கரோனா தடுப்பு நடவடிக்கை: புதுச்சேரியில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் கரோனா தடுப்பு நடவடிக்கையையொட்டி வருகின்ற திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கரோனா வைரஸ் தொற்று தற்போது அதிகரித்து வருவதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரவதாகவும், அதன்படி கடற்கரை சாலை வரும் 31 ம் தேதி வரையிலும், மதுபான கடைகள் நாளை மூட ப்படும் என்றும், 10 வயது குழந்தைகள், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் கண்டிப்பாக வெளியே வரகூடாது என முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

மேலும் மார்ச் 14 ஆம் தேதி முதல் வெளிநாட்டிலிருந்து ஆரோவிலுக்கு வெளிநாட்டவர் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டது  என்று குறிப்பிட்ட அவர்,கரோனா தடுப்பு நடவடிக்கையாக வருகின்ற திங்கட்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகள் 24 மணி நேரமும் திறந்து இருக்கும் எனவும் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT