தமிழ்நாடு

வங்கதேசத்திலிருந்து திண்டுக்கல் வந்த 11 பேருக்கு மருத்துவப் பரிசோதனை 

DIN

                                                                                                                                                 
வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர், திண்டுக்கல்லுக்கு கடந்த திங்கள்கிழமை(மார்ச் 16) வந்துள்ளனர். ஜமாத் சார்பில் நடைபெறும் மத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற வந்த 11 பேரும், திண்டுக்கல் பேகம்பூர் பகுதியிலுள்ள அசனத்புரத்தில் தங்கியுள்ளனர். 

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட நலப் பணிகள் மற்றும் மாநகர நல அலுவலர்கள், அசனத்புரத்திற்கு சென்று 11 பேருக்கும் சனிக்கிழமை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக நலப்பணிகள் இணை இயக்குநர் பூங்கோதை கூறுகையில், வங்கதேசத்திலிருந்து வந்த 11 பேருக்கும் கரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்து மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 19, 20,21ல் அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட்!

போட்டியின் சமநிலையைக் குலைக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி! விராட் கோலி ஆதங்கம்!

எச்சில் இலையில் உருண்டு பக்தர்கள் நேர்த்திக் கடன்

உ.பி.யில் 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் 5 ஆம் கட்ட தேர்தல்!

புத்த பூர்ணிமா கொண்டாடும் நாடுகளும் விதங்களும்

SCROLL FOR NEXT