தமிழ்நாடு

மயிலாடுதுறை தனி மாவட்டமாக அறிவிப்பு: அதிமுகவினர் வரவேற்பு

DIN

மயிலாடுதுறை புதிய மாவட்டமாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை அதிமுகவின் வரவேற்றுள்ளனர். 

நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து மயிலாடுதுறை புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். நாகை மாவட்டத்தில் இருந்து பிரித்து, மயிலாடுதுறையைத் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வைத்த தொடர் கோரிக்கையை ஏற்று முதல்வர் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

சட்டப்பேரவையில் இன்று முதல்வர் பழனிசாமி வெளியிட்ட இந்த அறிவிப்பின் மூலம் 38வது மாவட்டமாக உருவாகிறது மயிலாடுதுறை. இந்த நிலையில் மயிலாடுதுறை புதிய மாவட்டமாக சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டதை வரவேற்று சீர்காழியில் அதிமுகவினர் பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT