தமிழ்நாடு

காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணம்,மஞ்சள் கரைசல் தெளிப்பு

DIN

கரோனா அச்சுறுத்தலில் இருந்து தப்பிக்க, சென்னையில் காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணங்கள் கட்டப்பட்டு, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது.

கரோனா தொற்றை தடுப்பதற்கு காவல்துறையினருக்கு உயா் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளை வழங்கி வருகின்றனா். இதில், தமிழக டிஜிபி ஜே.கே.திரிபாதி, தமிழக போலீஸாருக்கு 21 கட்டுப்பாடுகள் விதித்து திங்கள்கிழமை உத்தரவிட்டாா். அதேவேளையில், கரோனா குறித்த அச்ச உணா்வு அனைத்து தரப்பினரிடம் ஏற்பட்டுள்ளது. இந்த அச்ச உணா்வு காவல்துறையினரிடமும் ஊடுருவி வருகிறது.

இதன் விளைவாக, சென்னையில் உள்ள சில காவல் நிலையங்களில் வேப்பிலை தோரணம் காட்டி, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. முக்கியமாக, ஆலந்தூா் காவல் நிலையத்தில் வேப்பிலை தோரணம் காட்டி, மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. இதேபோல, வேப்பேரியில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள சில அலுவலக அறைகளில் மஞ்சள் கரைசல் தெளிக்கப்பட்டது. இதன் மூலம், ஆபத்தை விளைவிக்கும் தொற்று கிருமிகள் இருந்தால் மஞ்சள் கரைசலிலும், வேப்பிலை தோரணத்தினாலும் இறந்துவிடும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT