தமிழ்நாடு

கரோனா: உண்டியலில் சேர்த்து வைத்த தொகையை நிதியாக அளித்த சிறுவன்

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உண்டியலில் சேமித்து வைத்த சில்லறை காசுகளை முதல்வர் பொது நிவாரண நிதிக்காக தமிழக உள்ளாட்சி துறை அமைச்சரிடம் வழங்கி ஆச்சரியப்படுத்திய சிறுவன்.

DIN


கோவையில் உண்டியலில் சேமித்து வைத்த சில்லறை காசுகளை ஐந்தாம் வகுப்பு சிறுவன் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளான்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா தடுப்பு பணிக்கு பொதுமக்களும் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு மக்கள் மனமுவந்து நிதியுதவி அளிக்க வேண்டும் என முதல்வர் கேட்டு கொண்டிருந்தார்.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணியை சந்தித்த ஜெய்ஷ்னு எனும் சிறுவன், தாம் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த 6,500 ரூபாயை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக கூறி அமைச்சரிடம் வழங்கினான். மேலும், தான் ரோலர் ஸ்கேட்டிங் வாங்குவதற்காக இந்த பணத்தை சேமித்து வைத்ததாகவும் அமைச்சரிடம் தெரிவித்தார்.

உடனடியாக அந்த சிறுவனை பாராட்டிய அமைச்சர் வேலுமணி, ஸ்கேட்டிங் ஷூவை தாம் வாங்கி தருவதாக கூறினார்.

இது குறித்து சிறுவன்  ஜெய்ஷ்னு கூறுகையில், கோவைபுதூர் ஆஸ்ரமம் பள்ளியில் ஐந்தாவது படித்து வருவதாகவும், சிறு வயதில் இருந்தே ஸ்கேட்டிங் ஷூ வாங்குவதற்கென இந்த பணத்தை சேமித்து வந்ததாகவும், தற்போது முதல்வரின் அறிவுரைப்படி இந்த நிதியை அமைச்சரிடம் வழங்கியதாக தெரிவித்தார். 

ஐந்தாவது பயிலும் சிறுவன் தாம் சேமித்து வைத்த சில்லறை காசுகளை முதல்வர் நிதிக்காக வழங்கிய இச்சம்பவம் அதிகாரிகள் மற்றும் பொது மக்களின் பாராட்டுதலை பெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT