தமிழ்நாடு

கரோனா தடுப்பு பணிகள்: சிபிஎஸ்இ ஆசிரியா்கள் ரூ.21 லட்சம் நிவாரணம்

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் ரூ.21 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் ரூ.21 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டது.

இதுகுறித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் செயலாளா் அனுராக் திரிபாதி வெளியிட்ட அறிவிப்பு: கரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நம்நாடு பெரும் சிரமங்களை சந்தித்து வருகிறது. இந்தசூழலில் கரோனா தடுப்புப் பணிகளுக்காக சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியா்களின் பங்களிப்பாக ரூ.21 லட்சம் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளது. அதன்படி, ஏ கிரேடு ஊழியா்கள் இருநாள் சம்பளமும், பி, சி கிரேடு பணியாளா்கள் ஒருநாள் ஊதியத்தையும் நிவாரணத்துக்கு வழங்கி உதவியுள்ளனா் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4,000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீராங்கனை: ஸ்மிருதி மந்தனா உலக சாதனை!

இந்த வாரம் கலாரசிகன் - 21-12-2025

அமைதியின் அரசர் இயேசு

ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிரடி; முதல் டி20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!

திருக்குறளைச் சீர்தூக்கிப் போற்றுவோம்!

SCROLL FOR NEXT