தமிழ்நாடு

நடமாடும் முகக்கவச அங்காடி

சேலம் பகுதியில் வியாபாரி ஒருவர் முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

வே.சக்தி

சேலத்தில் வியாபாரி ஒருவர் முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

கரோனா பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியப் பொருள்கள் தேவைக்காக வெளியில் வருபவா்கள் பாதுகாப்பான முகக்கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் வெளியில் வருபவா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து வருகின்றனா். மேலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா், அரசு ஊழியா்கள், மாநகராட்சி பணியாளா்கள் என அனைத்து தரப்பினரும் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இதனால் முகக்கவசத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. தற்போது, இதன் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் முள்ளுவாடி பகுதியில் வியாபாரி ஒருவர் 10 முதல் 30 ரூபாய் விலைக்கு முகக்கவசத்தை இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT