தமிழ்நாடு

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா; கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள்

DIN

கோயம்பேடு சந்தை மூலமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் கோயம்பேடு சந்தை மூலமாக கரோனா பாதித்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மட்டுமின்றி கோயம்பேடு சென்றுவந்த தமிழகம் முழுவதுமுள்ள பெரும்பாலான மாவட்டங்களைச் சேர்ந்தோர் பாதிக்கப்பட்டு வரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

முக்கியமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக பாதிப்பு இருந்து வருகிறது. 

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடையவர்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டில் மொத்த பாதிப்பு 264 அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT