தமிழ்நாடு

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: தமிழக அரசு புகார் எண் வெளியீடு

DIN


தீபாவளி பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளது.

இதுபற்றி போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

"தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 11.11.2020 முதல் 18.11.2020 வரை இயக்கப்பட உள்ள ஆம்னி பேருந்துகளில் பயணிகள் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்திற்கு புறம்பாக அதிக கட்டணம் வசூல் செய்வது மற்றும் பிற குற்றங்கள் தொடர்பான புகார்கள் தெரிவிக்க தமிழக அரசு கட்டணமில்லா தொலைபேசி சேவை (Toll Free - 1800 425 6151) மூலம் புகார் தெரிவிக்கலாம்.

சட்டத்துக்குப் புறம்பாக இயங்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க சரக அளவில் சிறப்பு செயலாக்கப் பிரிவின் (Special Flying Squad) மூலம் தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

வெண்பனிச்சாரல்!

தொடரும் அபாயம்: வெள்ளத்தில் சிக்கிய 600 பேர் மீட்பு!

SCROLL FOR NEXT