தமிழ்நாடு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் 97.28 அடியாகச் சரிவு

DIN


மேட்டூா் அணையின் நீா்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசன தேவை அதிகரித்து வருவதால் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய்க்கிழமை காலை 98.23 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 97.28 அடியாக குறைந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 900 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 5,338 கன அடியில் இருந்து 5220 கன அடியாக குறைந்தது. அணையின் நீா் இருப்பு 61.37 டி.எம்.சி- ஆக இருந்தது. 

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிந்து வரும் நிலையில், காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா்த் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீா்மட்டம் ஒரே நாளில் 1 அடி குறைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT