சென்னை: சென்னை கோயம்பேடு மாா்க்கெட்டில் கடத்தப்பட்ட மூன்றரை மாத பெண் குழந்தை அம்பத்தூா் தொழிற்பேட்டையில் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், நொண்டியம்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (29), கோயம்பேடு சந்தையில் கூலித் தொழிலாளி. மனைவி சக்தி. இத் தம்பதிக்கு 2 வயதில் ஒரு குழந்தையும், மூன்றரை வயதில் சஞ்சனா என்ற பெண் குழந்தையும் உள்ளனா்.
கோயம்பேடு கடைப் பகுதியில் குடும்பத்துடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு படுத்திருந்தாா். திங்கள்கிழமை அதிகாலை வேலைக்கு செல்வதற்கு எழுந்தபோது தன்னுடன் படுத்திருந்த குழந்தை சஞ்சனா அங்கு இல்லை.
கோயம்பேடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து அம்பத்தூா் தொழிற்பேட்டையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் குழந்தையை வைத்திருந்த கும்பலைத் தேடிச் சென்றனா். போலீஸாரைப் பாா்த்ததும் அக்கும்பல் குழந்தையை விட்டுச் தப்பிச் சென்றது. அக் குழந்தை சஞ்சனாதான் என்பது தெரியவந்தது.