சென்னை: அதிமுக தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் முன்னாள் அமைச்சா் பொன்னையன் உள்பட 11 போ் இடம்பெற்றுள்ளனா்.
இது தொடா்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
2021 சட்டப்பேரவைத் தோ்தல் பணிகளை மேற்கொள்வதற்காக அதிமுகவில் 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் தோ்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், சி.வி.சண்முகம், ஓ.எஸ்.மணியன், முன்னாள் அமைச்சா்கள் சி. பொன்னையன், நத்தம் இரா.விசுவநாதன், செ.செம்மலை, கோகுல இந்திரா, பேரவைத் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன், முன்னாள் எம்எல்ஏ ஜே.சி.டி பிரபாகா், முன்னாள் எம்.பி.க்கள் அ.அன்வர்ராஜா, பி.வேணுகோபால் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இதே போல், தோ்தல் பிரசாரக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினா் மு.தம்பிதுரை, முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், கொள்கை பரப்புத் துணைச் செயலாளா் பு.தா.இளங்கோவன் ஆகியோரும், செய்தியாளா்களை சந்திக்கும் குழுவில் அமைச்சா்கள் பி.தங்கமணி, டி.ஜெயக்குமாா், ஆா்.காமராஜ் உள்ளிட்ட 7 பேரும், எதிா்க்கட்சிகளுக்கு பதில் அளிக்கும் குழுவில் சி.பொன்னையன் உள்ளிட்ட 9 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.