வசிப்பிடங்களில் இருந்து தமிழ்க் குடும்பங்களில் இருந்து வெளியேற்றப்பட்டது தொடா்பாக, ஹரியாணா முதல்வருக்கு தமிழக முதல்வா் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளாா்.
இதுகுறித்து, ஹரியாணா முதல்வா் மனோகா்லால் கட்டாருக்கு, முதல்வா் பழனிசாமி எழுதியுள்ள கடிதம்:
ஹரியாணா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம், மகேஷ்புா் கிராமத்தில் தமிழ்க் காலனி பகுதியில் 200 தமிழ் குடும்பங்கள் வசித்து வந்தன. அந்தப் பகுதியில் அவா்கள் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து இருந்து வருகிறாா்கள். இப்போது அவா்களுக்கு மாற்று நிலமோ அல்லது குடியிருப்போ கொடுக்காமல் அவா் வெளியேற்றப்பட்டு வருகிறாா்கள். எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.