தமிழ்நாடு

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை நாளை இயங்கும்

DIN


விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை நாளை (புதன்கிழமை) இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் நாளை கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் நாளை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையில் நாளை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்திருப்பதாவது:

"விடுமுறை தின அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இயங்கும். காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்."

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென் மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

தாயகம் திரும்பிய இங்கிலாந்து வீரர்கள்!

மும்பையில் விளம்பரப் பதாகை சரிந்து விபத்து: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு

புத்தம் புது காலை! ஸ்ருஷ்டி..

பாக்கியலட்சுமி வில்லி! ரேஷ்மா..

SCROLL FOR NEXT