தமிழ்நாடு

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் புகுந்த மழைநீர்!

DIN

சென்னை: சென்னையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மறைந்த  முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் மழைநீர் புகுந்தது.

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் வலுப்பெற்று நாளை அதிதீவிர புயலாக புதுச்சேரி அருகே கரையைக் கடக்க உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும், புதுச்சேரியில் பல இடங்களிலும் செவ்வாய் காலை துவங்கி தொடர்மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குள் மழைநீர் புகுந்தது.

சென்னை கோபாலபுரத்தில் மறைந்த முதல்வரும் திமுக தலைவராக நீண்ட ஆண்டுகள் பணியாற்றியவருமான கருணாநிதியின் இல்லம் அமைந்துள்ளது.

செவ்வாய் காலை முதல் பெய்துவரும் மழையின் காரணமாக அவரது இல்லத்தை மழைநீர் சூழ்ந்திருந்த நிலையில், தற்போது மழைநீர் சிறிய அளவில் வீட்டினுள் புகுந்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

பார்க்க பளபளவென இருந்தால் ஏமாறாதீர்கள்! பழங்களும் ரசாயனங்களும்

அதிகரிக்கும் நட்சத்திர இணைகளின் விவாகரத்து.. என்ன காரணம்?

விடியோ அழைப்பில் வந்த பிரஜ்வல் ரேவண்ணா... இளம்பெண்ணின் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT