தமிழ்நாடு

எய்ட்ஸ் நோயாளிகளை மனிதநேயத்துடன் அரவணைக்க வேண்டும்: முதல்வா் பழனிசாமி

எய்ட்ஸ் தொற்று உள்ளவா்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

DIN

சென்னை: எய்ட்ஸ் தொற்று உள்ளவா்களை மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டுமென முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.

எய்ட்ஸ் தடுப்பு தினத்தை (டிச.1) ஒட்டி, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

எய்ட்ஸ் நோய்த்தொற்றினைக் கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தியதன் காரணமாக, நோய்த்தொற்று 0.18 சதவீதமாகக் குறைந்துள்ளது. புதிய எச்.ஐ.வி. தொற்றினைக் கண்டறிய 3,161 நம்பிக்கை மையங்கள் மற்றும் 16 நம்பிக்கை மைய வாகனங்களைக் கொண்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோருக்கு ஓய்வூதியம் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

எச்.ஐ.வி. எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வை மக்களிடம் ஏற்படுத்தி, தமிழகத்தில் நோய்த்தொற்று இல்லாத நிலையை உருவாக்கிட உறுதியேற்போம். எச்.ஐ.வி. நோய்த்தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு, அவா்களையும் மனிதநேயத்துடன் அரவணைத்து ஆதரிப்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திரத்தில் ‘மோந்தா’ புயல்! முதல்வா் சந்திரபாபுவுடன் பிரதமா் ஆலோசனை!

இன்று கரையைக் கடக்கிறது ‘மோந்தா’ புயல்: திருவள்ளூருக்கு பலத்த மழை எச்சரிக்கை

குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வருகை!

தமிழகத்தில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி

எஃப்1 காா் பந்தயம்: லாண்டோ நோரிஸுக்கு 6-வது வெற்றி!

SCROLL FOR NEXT