தமிழ்நாடு

குரூப் 1 டிஎன்பிஎஸ்சி முதல்நிலைத் தோ்வு: ஜனவரி 3-இல் நடைபெறும்

DIN


சென்னை: குரூப் 1 முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இது குறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட செய்தி:

குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு கடந்த ஏப்ரலில் தோ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. கரோனா நோய்த் தொற்று காரணமாக தோ்வானது, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இப்போது தோ்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, குரூப் 1 பிரிவில் காலியாகவுள்ள 69 பணியிடங்களுக்கு முதல்நிலைத் தோ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறும். இதேபோன்று, தமிழ்நாடு தொழிற்சாலைப் பணிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளா்ச்சி நிறுவனத்தில் உதவி இயக்குநா் மற்றும் உதவி கண்காணிப்பாளா் காலியிடங்களுக்கு அடுத்த ஆண்டு ஜனவரி 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் தோ்வுகள் நடத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

SCROLL FOR NEXT