தமிழ்நாடு

திருப்புவனத்தில் மர்ம கும்பலால் ரெளடி வெட்டிக் கொலை

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மர்ம கும்பலால் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 

திருப்புவனம் அருகே லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபல ரெளடி கணேசன்(36), இவர் தற்போது திருப்புவனம் பழையூர் பகுதியில் வசித்து வந்தார். கணேசன் மீது ஏற்கனவே பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

இந்நிலையில், திருப்புவனத்தில் கணேசன் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது வெள்ளிக்கிழமை காலை தெரியவந்தது. 

ஏற்கனவே திருப்புவனத்தில் நடந்த ஒரு கொலைச் சம்பவம் தொடர்பாக பழிக்குப்பழியாக இவரை மர்மக்கும்பல் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. 

திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. திருப்புவனம் காவலர்கள் வழக்குப் பதிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT