மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நவராத்திரி விழாவின் மூன்றாம் நாள் திங்கள்கிழமை அன்று வேப்பிலை காப்பு திரிசூல நாயகியாய் கருவறை அம்மன் பக்தர்களுக்குக் காட்சி அளித்தார்.
வழக்கம் போல லட்சார்ச்சனை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் தலைமையில் தேனி விழுப்புரம் சேலம் ராமநாதபுரம் ஆகிய மாவட்ட நிர்வாகிகளும் துபாய் நாட்டு மன்றங்களின் நிர்வாகிகளும் செய்து இருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அம்மனை தரிசிக்க வந்த பக்தர்கள் அரசின் வழிகாட்டுதலின்படி முகக் கவசத்துடன் சமூக இடைவெளியுடன் வரிசையில் வந்து அம்மனை தரிசனம் செய்தனர்.