தமிழ்நாடு

தமிழகத்தில் இன்று 5,976 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் 76 பேர் பலி

DIN

தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது இன்று (செப்.4, வெள்ளிக் கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 76 பேர் பலியாகியுள்ளனர். 

தமிழகத்தில் இன்றைய கரோனா பாதிப்பு விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் புதிதாக 5,976 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் தமிழகத்தில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள் 5,951. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் 25 பேர். இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 4,51,827 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் தொடர்ந்து 2 ஆவது நாளாக இன்று கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1000க்கும் கீழ் பதிவாகியுள்ளது. மாவட்டங்களில் அதிகபட்சமாக சென்னையில் 992 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இன்றைய செய்திக் குறிப்பில், மேலும்79 பேர் (அரசு மருத்துவமனை-51, தனியார் மருத்துவமனை -28) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கரோனா பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்று ஒரேநாளில் 6,334 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,92,507 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய நிலவரப்படி, 51,633 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு இன்று அதிகபட்சமாக 83,699 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதுவரை மொத்தம் 51,30,741 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. 

கரோனா பரிசோதனைக்காக அரசு ஆய்வகங்கள் 64, தனியார் ஆய்வகங்கள் 91 என மொத்தம் 155 பரிசோதனை ஆய்வகங்கள் செயல்பாட்டில் உள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

SCROLL FOR NEXT