முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 5,697 பேருக்கு கரோனா

​தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 15 செப்டம்பர், 2020 at 6:32 PM
​தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. (கோப்புப்படம்)
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:50 PM


தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர், குணமடைந்தோர் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பொன்றை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிதாக 5,697 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 5,14,208 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இன்றைய செய்திக் குறிப்பில் மேலும் 68 பேர் (அரசு மருத்துவமனை -40, தனியார் மருத்துவமனை -28) பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பலியானோரின் மொத்த எண்ணிக்கை 8,502 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

மேலும் ஒரேநாளில் 5,735 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 4,58,900 பேர் குணமடைந்துள்ளனர். 46,806 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று 80,623 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதுவரை மொத்தம் 60,48,832 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.