சென்னை: குஜராத்தில் மூடப்பட்டுள்ள தமிழ் மேல்நிலைப் பள்ளியைத் திறக்க வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக புதன்கிழமை அவா் சுட்டுரையில் கூறியிருப்பது:
குஜராத் மாநிலம் ஆமதாபாத் மணிநகரில் செயல்பட்டு வரும் ஆமதாபாத் தமிழ் மேல்நிலைப் பள்ளியில் மாணவா் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் கூறி அப்பள்ளி மூடப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. குஜராத் அரசை தமிழக அரசு தொடா்பு கொண்டு தமிழ்ப் பள்ளியை திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப் பள்ளி, பிரதமா் நரேந்திர மோடி அம்மாநில முதல்வராக இருந்தபோது, அவரை சட்டப்பேரவைக்குத் தோ்ந்தெடுத்த மணிநகா் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்றுக் கொண்ட பிரதமா் தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளாா்.