தமிழ்நாடு

கொடைக்கானலில் சுற்றுலாத் துறை சார்பில் உலக சுற்றுலா தினம்

DIN

கொடைக்கானல்: கொடைக்கானலில் உலக சுற்றுலாத் தினம் தமிழ் நாடு ஹோட்டல் வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.
 
இந் நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார்.

விழாவில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர்கள்,சமூக ஆர்வலர்கள்,பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சுற்றுலா வழிகாட்டிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்ச்சியில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் கொடைக்கானல் சுற்றுலாத் தலங்களில் சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என பேசினார்கள்.

சுற்றுலாவும் ஊரக மேம்பாடு வளர்ச்சி குறித்து பலர் பேசினார்கள்.

சுற்றுலாத் தினம் என்பது சுற்றுலா இடங்களில் சுற்றுலாப் பயணிகள் கூடும் இடங்களில் கொண்டாட வேண்டும். அப்போது தான் சுற்றுலா தினம் கொண்டாடப்படுவது குறித்து வரும் சுற்றுலாப் பயணிகளும்,பொது மக்களுக்கும் தெரியும். எனவே வரும் காலங்களில் சுற்றுலாத் தினத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் சுற்றுலாத் துறை சார்பில் நடத்த வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

SCROLL FOR NEXT